Monday, July 21, 2008

என் தோழிக்கு !!!


இது தான் காதல் என்று எடுத்துக் கூறவும் இயலவில்லை
இவை தான் என்று பிரித்துப் பார்க்கவும் புரியாதவன்
பெண்ணே என்னிடம் ஏனடி காதலும் கொண்டாய்
கல் நெஞ்சுகாரன் , காயம் செய்தேன் உன் மனதை
உனக்கென்ன பெண்ணே அழுது விட்டாய் ,
ஆண் மகன் என்ற ஆணவம் அடக்கிக் கொண்டேன்
சரி என்றோ பிழை என்றோ எடுத்துக் கூறவும் ஆள் இல்லை
இன்று மனவேதனையுடன் மணவறையில் நீ
விடை தெரியா வினாக்களுடன் பிணவறை வரை நான் !!!!

No comments: