Thursday, July 31, 2008
காமமும் காதலும்
காமம் இல்லாத காதல், அது கற்பனை கலந்திடாத கவிதை
கற்பனை கலக்கும் போது தான் கவிதையும் அழகு
ஆம் பெண்ணே ,
உன் இதழும் என் இதழும் சேர்த்தே இனி வார்த்தைகள் பேசுவோம்
காது மடல் ஓர மூச்சில் தணல் மூட்டுவோம்
வியர்வை கொண்டே குளிரும் காயுவோம்
உன் சேலைக்குள் நானும் , என் சட்டைக்குள் நீயும் உடை மாற்றுவோம்
காயம் செய்து குதூகலிப்போம்!
விரல் கொண்டு மேனியில் ஓவியம் தீட்டுவோம்
குளிப்பித்து அழுக்காகும் கலை கற்போம்
வாத்சயனற்கும் வித்தை கற்பிப்போம்
வெட்கத்தையும் வெட்கப்பட செய்வோம் இனி
இனி கலைந்த சேலையும் காய்ந்த பூக்களும் நடந்தேறிய கதை காலையில் சொல்லட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment