Thursday, July 31, 2008

தேவதையிடம் கேட்ட வரம்


தேவதையே உன்னை கணப் பொழுதும் பிரியாத வரம் ஒன்று வேண்டும்!
தேவதையே அதை நீயே தருவாய்!
உன் இமையோடு மையாக வேண்டும்!
உன் இடை தொடும் உடையாக வாழ்ந்திட வேண்டும்!
உன் நெற்றி சுருளும் முடியாக வேண்டும்!
உன் கால் சிணுங்கும் கொலுசாக வேண்டும்!
உன் கண்ணம் தொடும் நீராக வேண்டும்!
முதுமையிலும் உன் விரல் பற்றி நடந்திட வேண்டும்!
மரணம் நேர்ந்தாலும் உன் மடி மீது வேண்டும் !!!!

No comments: