Tuesday, September 30, 2008


கலைந்தும் கலையாத காலை பொழுது
இருளும் ஒளியும் சண்டையிட
துயிலும் கலைந்தது மெல்ல
கரம் பிடித்த காதல் மணைவி
கை படும் தூரத்தில்
இனி போர்வையும் சுகம் இல்லையடி குளிருக்கு
கரம் பற்றி கட்டி அணைத்திட முயன்றேன்
மெல்ல சிணுங்கினாள் செல்லமாய் உதறினாள்
மனம் வாடும் முன் மருந்தென முத்தமும் தந்தாள்
உன் முத்தத்தின் ஈரத்திலும்
என் அரவணைப்பின் கதகதப்பிலும் ஆண்டுகள் நூறு வாழ்ந்து தான் பார்ப்போம் நம் காதலின் சத்தியத்தில் கரைந்து தான் பார்ப்போம்