Friday, October 9, 2009

முதல் இரவு

முதல் இரவு - மை பூசிய இந்த மங்கையின் கண்ணுக்குள்ளும் சிறு கனவுண்டு !
இந்த பேதையின் ழ் மனதிலும் பல ஆசையுண்டு !!
கணவுகளை தாங்கிய மனம் படர்ந்து நிற்க ,
பெண்ணென வளர்ந்த மனம் தவிப்பாய் தயங்கி நிற்க
அறிந்தவனாய் உன் இரு கரங்களில் என் கை கோர்த்து
தோழனென தோள் கொடுத்து , காது மடல் ஓரம் மெல்ல காதல் மொழி பேசினாய் !
அனைத்து அனைத்து மெல்ல அரவணைத்தே என் அச்சம் நீக்கினாய் !
விரல் தீண்டலில் என் வெட்கம் உடைத்தாய் !
மையல் முத்தத்தில் உயிர் உறைய செய்து , உஷ்ண முத்தத்தில் உயிர்தெழ செய்தாய் !
மூச்சு காற்றில் மெய்யுருக செய்து , மீசை ரோமத்தில் விழித்தெழ செய்தாய் !
உன் மெய் தீண்டலில் என் பெண்மையை உணரசெய்தாய்! ஆண்மகனே!!
மஞ்சத்தில் என்னை மலர செய்து , இந்த பெண்ணுக்குள் புது இன்பம் உணர செய்தாய் !
கன்னியின் கற்பனைகளை காட்சியாய் உயிர்பெயர்த்து
கனவுகளை கவிதையாய் மொழிபெயர்த்த என்னவனே ! உனக்காய்
முற்றுப்புள்ளி இல்லா ஒரு முத்தம் !!!
- Chiyaan

Tuesday, September 22, 2009

கானல் கனவு !!!



சலனமற்று கிடந்த கைபேசியை நொடிக்கொரு தரம் உற்று நோக்கினேன்
செல்லமாய் கைபேசி சினுங்கியபோதெல்லாம் உன்னினைவாய் சினுங்குவதாய்
எட்டி பிடித்து ஏமாந்தேன் ...

காற்றில் கதவசைந்தாலும் வந்தது நீயென வாசல்வரை வந்து சென்றேன்
விக்கித்து நின்றாலும் நீரின்றி வீன்பிடிவாதம் செய்தேன்
நினைப்பது நீயென்றால் அதைநீடிக்கும் நப்பாசையில் ...

உன்பெயர் யார் உட்சரித்தாலும் ரகசியமாய் சிரித்தேன்
உறக்கமில்லா இரவுகளில் உன்னுடன் உறவாடிய நிமிடங்களை
உறையவைத்து ரசித்தேன் ...

தோழியே! உன்னால் நேர்ந்த தவிப்புகள் போதும்
பெண்ணே மறுமுறை ஓர் உண்மை சொல் உனக்கும் இப்படி தான் நேர்ந்தது என்று
அப்போது தகிப்புகளும் சுகமாகும் ...

Thursday, June 18, 2009


நரை கூடி கிழபருவமெய்தி மரணம் என்னும் நிம்மதி நோக்கி அரை நித்திரையில் நான் , நிழலாய் ஓர் உருவம் உன் சாயலில் என் ஜன்னல் கடந்து செல்ல
ஆர்வத்தில் ஆசையாய் ஒட்டிய அரை புன்னகையும் நிழல் நோக்கியே ...
ஒட்டிய புன்னகை உறையும் முன் , இதயமும் உறைந்து போனது முடிவாய் உன் பெயர் சொல்லி ...
காலம் காயத்தை மாற்றும், காதலை மாற்றுமா ? என் முதல் காதல் !!!!