Thursday, July 31, 2008

முத்தமிழ் அழகி


உன் கயல் விழி பேசும் மொழிக்கு முன்னால்
இயல் தமிழும் என்ன செய்யும்
உன் கொலுசின் சிணுங்கலுக்கு முன்னால்
இசைத் தமிழும் இல்லாமல் போனதடி!
உன் நடை என்னும் நாடகம் கண்டு
நாடகத் தமிழும் நாணம் கொண்டதடி
உன்னால் இன்று முத்தமிழுக்கும் கர்வபங்கம்!

No comments: