Sunday, March 7, 2010


தொடர் வண்டி பயணத்தில் தொலைந்து போனதொரு இரவில்
மழை சாரலின் சிலிர்பாய் அருகாமையில் தேவதையின் வாசம் ,
பரிதவிப்பாய் கடந்த பத்து நிமிடத்தில் நூறு முறை இறந்து பிறந்திருபேன்
தவிப்பாய் தயங்கிய வார்த்தைகளும் உன் இமையின் படபடப்பில் சிதைந்து போனது
உறைந்த வார்த்தையினை சிறை மீட்டி அழகாய் தொடுத்தேன் கவிதையினை , கடிதமாய்
என் மீது இல்லையென்றாலும் , உனக்கென்று ஒரு காதல் வந்த பின் இதை மறுமுறை வாசித்து பார்
ஏனெனில் என் காதல் புரியவில்லையென்றால் இக்கவிதை வெறும் வார்த்தையின் விளம்பரம்
காதலே புரியாதவர்களுக்கு இது வெற்று காகிதத்தில் தீட்டிய கிறுக்கல்கள் .

No comments: