Friday, October 9, 2009

முதல் இரவு

முதல் இரவு - மை பூசிய இந்த மங்கையின் கண்ணுக்குள்ளும் சிறு கனவுண்டு !
இந்த பேதையின் ழ் மனதிலும் பல ஆசையுண்டு !!
கணவுகளை தாங்கிய மனம் படர்ந்து நிற்க ,
பெண்ணென வளர்ந்த மனம் தவிப்பாய் தயங்கி நிற்க
அறிந்தவனாய் உன் இரு கரங்களில் என் கை கோர்த்து
தோழனென தோள் கொடுத்து , காது மடல் ஓரம் மெல்ல காதல் மொழி பேசினாய் !
அனைத்து அனைத்து மெல்ல அரவணைத்தே என் அச்சம் நீக்கினாய் !
விரல் தீண்டலில் என் வெட்கம் உடைத்தாய் !
மையல் முத்தத்தில் உயிர் உறைய செய்து , உஷ்ண முத்தத்தில் உயிர்தெழ செய்தாய் !
மூச்சு காற்றில் மெய்யுருக செய்து , மீசை ரோமத்தில் விழித்தெழ செய்தாய் !
உன் மெய் தீண்டலில் என் பெண்மையை உணரசெய்தாய்! ஆண்மகனே!!
மஞ்சத்தில் என்னை மலர செய்து , இந்த பெண்ணுக்குள் புது இன்பம் உணர செய்தாய் !
கன்னியின் கற்பனைகளை காட்சியாய் உயிர்பெயர்த்து
கனவுகளை கவிதையாய் மொழிபெயர்த்த என்னவனே ! உனக்காய்
முற்றுப்புள்ளி இல்லா ஒரு முத்தம் !!!
- Chiyaan

1 comment:

Chiyaan said...

An Attempt to write from a girls perspective :)