Tuesday, September 22, 2009
கானல் கனவு !!!
சலனமற்று கிடந்த கைபேசியை நொடிக்கொரு தரம் உற்று நோக்கினேன்
செல்லமாய் கைபேசி சினுங்கியபோதெல்லாம் உன்னினைவாய் சினுங்குவதாய்
எட்டி பிடித்து ஏமாந்தேன் ...
காற்றில் கதவசைந்தாலும் வந்தது நீயென வாசல்வரை வந்து சென்றேன்
விக்கித்து நின்றாலும் நீரின்றி வீன்பிடிவாதம் செய்தேன்
நினைப்பது நீயென்றால் அதைநீடிக்கும் நப்பாசையில் ...
உன்பெயர் யார் உட்சரித்தாலும் ரகசியமாய் சிரித்தேன்
உறக்கமில்லா இரவுகளில் உன்னுடன் உறவாடிய நிமிடங்களை
உறையவைத்து ரசித்தேன் ...
தோழியே! உன்னால் நேர்ந்த தவிப்புகள் போதும்
பெண்ணே மறுமுறை ஓர் உண்மை சொல் உனக்கும் இப்படி தான் நேர்ந்தது என்று
அப்போது தகிப்புகளும் சுகமாகும் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment