Sunday, July 18, 2010


அரை கால் சட்டை அணியும் வயதில்
அர்த்தமற்ற சண்டை ஆயிரமிட்டாலும்
ஆசையாய் கிடைத்த ஆரஞ்சு மிட்டாய் என்றபோதும்
பாதியாய் கடித்து கை பிடித்து ஊட்டி விட்ட என் மூன்று வயது குட்டி தேவதை !!!

விடலை பருவமதில் நெல்லி மரம் ஏறி கணி திருடும் போதெல்லாம்
பக்கம் நின்று பாவாடை ஏந்தி, பத்திரமாய் என பார்த்து சிரித்தவள்
பக்கம் நின்று பகிர்ந்துண்ட என் பட்டு ரோஜா !!!

பள்ளி பருவமதில் துள்ளிய ஓட்டமும், மருண்ட கண்ணுமாய்
நித்தம் ஒரு முயல் கதை, மயில் கதை என
கை பிடித்தே நடக்கலானோம்
நட்பாய் நட்புனர்த்திய என் பள்ளி தாமரை !!!

கல்லூரி சாலையில் பூக்களும் காத்திருக்கும், வண்ணத்து பூச்சி அவள் வருகைக்காக
வந்து அமர்ந்தது என் முன் இருக்கையில்
கேலி பேச்சும் கிண்டல் பொழுதும் ,
அரை பார்வையும் அவசர தேடலுமாய் தொடர்ந்தது
நூலகத்தின் நிசப்தத்தில் பார்வை பரிமாற்றம் ...
இன்றும் ஒன்றாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்
கல்லூரி வகுப்பில் கடைசி மேஜையில் ஒன்றாய் கிறுக்கிய பெயரின் மூலம் !!!



மெல்லிய தூறல் கண்டு ஒதுங்கியே நின்றேன் ,
ஒற்றை கொடையில் ஒரு மின்னல், எதிர் வீட்டு தாரகை ...
மழை ஒட்டாமல ஒற்றை கொடையில் ஒட்டியே சென்றோம்
சில்லென்று மழை துளி பட்டு சிலிர்த்ததோ ,
அவள் விரல் பட்டு சிலிர்த்ததோ
மண் வாசமோடு அவள் வாசமும் மனதை வருட
மனம் மாற்றும் முன், இடம் மாற்றம்
மிஞ்சியது பரிசாய் அவள் கொடுத்த கடைசி முத்தமும் வாழ்த்து அட்டையும் !!!

வெண்ணிலவும் முகில் தேடும் நள்ளிரவு நேரம்,
அருமை தோழியுடன் ரயில் பயணம் ,
கண்ணியமாய் கதை பேசி , மௌனமாய் மொழி பேசி
மெல்ல புன்னகைத்தோம் , சிக்கனமாய் சிரித்தோம்
கரைந்த இரவின் இசையில் தோழமை உணர்த்தினாள் !!!

என்னை ஈர்த்த அறிமுகம்கள் பல

--- அன்னை காட்டிய புகைப்படத்தை
ஆர்வமாய் வாங்கி அவசரமாய் பார்க்கையில் ,
வந்து போனார்கள் நினைவில் ...
குட்டி தேவதைகளும் ,மனதை வருடிய தென்றல்களும் !!!








No comments: