Wednesday, November 26, 2008

நம்மை என்ன சொல்ல !


எட்டும் பொருளையும் எட்டா இடத்தில் இருந்தே எடுக்க எத்தநித்தேன்
எட்டும் சாக்கில் உண்னை எட்டி பிடித்திடும் ஆசையில் தான்
அதை தெரிந்தும் வளைந்து கொடுக்கும் உன்னையும் என்ன சொல்ல .
சரியா உடையை சரிய செய்து , சரிந்த உடையை சரி செய்வது போல்
என் மனதையும் சரிய செய்யும் உன்னையும் என்ன சொல்ல
அறிந்தும் அதை ரசிக்கும் என்னையும் என்ன சொல்ல .
கண்ணத்தில் மை என்று கதை சொல்லி அதை துடைப்பதை போல,
உண் கண்ணத்தை வருட துடிக்கும் என்னையும் என்ன சொல்ல
புரிந்தும் மெல்ல சிரிக்கும் உன்னையும் என்ன சொல்ல.
பட்டு பூச்சியை கண்டு பொய்யாய் பயந்து , கரமோடு கரம் கோர்த்து
தோல் மீது முகம் புதைத்து நடிக்கும் உன்னையும் என்ன சொல்ல
ஏனோ அதையே எதிர்பார்க்கும் என்னையும் என்ன சொல்ல

No comments: